2025 ஜூன் 21, சனிக்கிழமை

காணி அபகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடர நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணி இராணுவத்தால் அபகரிப்பு செய்யப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய  பிரதேச சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன் நில அபகரிப்புக்கு எதிராக திருநெல்வேலி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவும் சபை தீர்மானித்துள்ளது.

பிரதேச சபையின் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்ற போதே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தமிழ்மிரருககு தெரித்தார்.

திருநெல்வேலி பாற் பண்ணை வீதியில் 5.5 பரப்பளவு கொண்ட குறித்த காணியை தனியாரிடம் இருந்து நல்லூர் பிரதேச சபை பணம் கொடுத்து கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது அக்காணியை இராணுவத்தினர் அபகரித்து முகாம் அமைத்து வருவதாகவும்  இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு முன்பாக கவனயீர்பு போராட்டம் நடத்தவும்  சபை தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பியவுடன் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .