2025 ஜூன் 21, சனிக்கிழமை

சமூக பொது நோக்கு மண்டபம் திறப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

நாவாந்துறை புதிய சோனகத்தெரு மக்களின் நலன் கருதி 'இணையும் கரங்கள்' என்னும் பெயரில் சமூக பொது நோக்கு மண்டபம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடபிராந்திய ஸ்ரீசத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் ஜனாப் எம்.நிபாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடபிராந்திய சத்திய சாயி நிலையத்தின் தலைவர் டி.ஜே.கணேசமூர்த்தி மற்றும் செவ்வளப் பள்ளிவாசல் மௌலவி ஏ.எம்.அப்துல் அஸிஸ் ஆகியோர் உத்தியோக பூர்வமாக சமூக பொது மண்டபத்தை திறந்து வைத்தனர்.

இதன்போது, உரையாற்றிய ஸ்ரீ சத்தியசாயி தலைவர்,

'எமது பிரதேசத்தில் இருக்கும் அனைவரிடமும் அன்பாக இருங்கள், அனைவருக்கும் சேவை செய்யுங்கள் எனும் கோட்பாட்டிற்கு அமைய எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். எல்லா மதங்களை போலும், நாமும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயற்பட வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில், அபூபக்கர் பள்ளிவாசல் மௌலவி எம்.எப்.பரூஸ், முஸ்லிம் மக்களின் பதிவாளர் பாஹிர், யாழ்.கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர். கே.எம்.நிலாம், யாழ்.நகர் பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழுவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜெயந்த, நாவாந்துறை இராணுவ அதிகாரி கொமாண்டர் லெப்டன் ஜெயவர்த்தன மற்றும் பொது மக்கள், ஸ்ரீ சத்திய சாயி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .