2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 23 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பும் பெற்றோர் திறன் விருத்தி அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட உத்தியோகத்தர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் தெல்லிப்பளை, சாவகச்சேரி, நாவற்குழி, மட்டுவில், போன்ற பகுதிகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின், யாழ். மாவட்ட உத்தியோகத்தர்களினால் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு; முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக்கருத்தரங்கில், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன், தமது கேள்விகளையும் தொடுத்துள்ளனர்.

தெல்லிப்பளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கில், கர்ப்பணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .