2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அரச காணிகளில் பொலிஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை: யாழ். டீ.ஐ.ஜீ

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


தனியார் காணிகளில் இயங்கும் பொலிஸ் நிலையங்களை அரச காணிகளில் அமைப்பதற்கு பொலிஸ் தலைமையத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி கிடைத்தவுடன் அரச காணிகளில் பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பிரதேச செயலகங்களினால் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு அரச காணிகள் வழங்கப்பட்டுள்ள போதும் இன்னமும் பொலிஸ் நிலையங்களை இடமாற்றுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஊடகவியலாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதிப்பொலிஸ் மா அதிபர், தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கிவரும் பொலிஸ் நிலையங்களை அரச காணிகளில் அமைப்பதற்கு பிரதேச செயலகங்களினால் சில அரச காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த காணி தொடர்பான விபரங்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரச காணிகளில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைப்பற்கு பொலிஸ் தலைமையகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார் தற்போது பொலிஸ் பாவனையில் உள்ள தானியார் வீடுகளுக்கு மாதாந்தம் வாடகைப்பணம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றார் அத்துடன் ஒரு பொலிஸ் நிலையம் புதிதாக அமைப்பது என்பது  வீட்டைக்கட்டுவது போன்றதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அதற்கு பதிலளித்து முடிந்த பின்னர் யாழ் மாவட்டத்திற்கு பொலிஸார் தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .