2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடபகுதி கடலில் மீன்பிடிக்க தொடரும் பாஸ் நடைமுறை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


வடபகுதி கடற்பரப்பில் தொடரும் பாஸ் நடைமுறையினால் கடற்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கள் கவலை தெரிவித்துள்ளன.

குறிப்பாக மாதகல் கடற்பகுதியில் உள்ள துறையில் மாரீசன் கூடல், சீந்திப்பந்தல், ஊறணி போன்ற கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாதகல் பகுதியில் உள்ள மூன்று துறைகளிலும் கடற்படைக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு பாஸ் கடற்படையினரிடம் காண்பிக்கப்பட்ட பின்னரே கடலுக்குச் செல்ல கடற்படையினரால் அனுமதிக்கப்படுவதாக கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் ஒரு கடற்தொழிலாளருக்கு இரண்டு பாஸ் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மூலப்பிரதியை கடலுக்குச் செல்லும் கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு கடற்படையினரிடம் இருக்கும் அதன் பிரதியை கொண்டு கடலுக்குச் செல்லவேண்டும்.

தொழில் முடிந்து திரும்பிவரும்போது பிரதியை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு மூலப்பிரதியை பெற்றுச் செல்வதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போர் முடிந்து மூன்று வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் தற்போதும் பாஸ் நடைமுறையில் இருப்பதாகவும் பாஸ் நடைமுறை நீக்கிவிட்டோம் என்று அரசியல்வாதிகள் தெரிவித்து வரும் நிலையில் இப்போதும் பாஸ் நடைமுறைதொடர்வதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .