2025 ஜூன் 21, சனிக்கிழமை

வாதப்பிரதிவாத்துடன் முடிந்தது யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 01 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


கடந்த 8ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு விசேட கூட்டம் நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழன் நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயம், கால்நடை, நீர்பாசனம், தென்னைப் பயிர்ச்செய்கை மற்றும் பனை அபிவிருத்தி, மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடங்கள் குறித்து ஆராயப்பட்து.

கூட்டத்தின் தொடக்கத்தில் அரச அதிபரின் வரவேற்புரையினைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக கல்வி, போக்குவரத்து, புகையிரதம், சுகாதாரம், ஆயுர்வேதம் மற்றும் சமுர்த்தி தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது சமுர்த்தி திட்டம் தொடர்பாக யாழ் மாவட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து சமுர்த்தி அதிகாரி ஒருவரால் விளக்கம் அளிக்கப்பட்ட பின்னர் நிகழ்விற்கு தலைமை தாங்கிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, திவிநெகும திட்டத்தில் சமுர்த்தி திட்டம் உள்வாங்கப்பட்டுள்ளதா? திவிநெகும திட்டம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டால் சமர்த்திப் பயனாளிகள் பாதிக்கப்படுவார்களா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளிக்க முற்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்றது தொடர்ந்து சிறிது நேரம் மாநாட்டு மண்டபம் அமளிதுமளியாகியது.

இதனைத் தொடர்ந்து திவிநெகும திட்டத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தமைக்கான காரணம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விளக்கமளித்தார்.

இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பேரேரா மற்றும் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,பிரதேச சபை தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நேரம் போதாமை காரணமாக இன்றைய நிகழ்ச்சி நிரலின் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் மற்றுமொரு விசேட கூட்டத்தில் ஆராய்வதாக இன்றைய கூட்டம் ஏகமனதாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .