2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வலி.கிழக்கு பிரதேச சபையின் புதிய அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 02 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் வலி.கிழக்கு பிரதேச சபைக்கென அச்சுவேலியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜெயகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், வலி.கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயந்தா சோமராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

26 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில் வலி.கிழக்குப் பிரதேச சபைக்கான உபஅலுவலகம், நூலகம் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .