2025 ஜூன் 21, சனிக்கிழமை

நீதிமன்றம் உத்தரவிட்டால் நஷ்டஈடு: சம்பிக்க

Super User   / 2012 நவம்பர் 05 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

வட மராட்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாடசாலை மாணவனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் நஷ்டஈடு வழங்க தயார் என மின் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார்.

யாழ். மாவட்ட மின்சக்தி மற்றும் மின் சக்தி வள பாவனை குறித்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் சம்பிக்க,

"இந்த சம்பவம் தொடர்பில் மின்சார சபையின் பொறுப்பற்ற தன்மையினால் உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதா என மின்சார சபை ஊழியர்களிடம் தகுந்த விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு, நீதிமன்றினால் பாடசாலை மாணவனின் இறப்பு குறித்து மின்சார சபையிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குமாறு மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் நஷ்ட ஈடு வழங்கப்படும்" என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .