2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சுப்பர்மடம் அனர்த்த எச்சரிக்கை கோபுரம் மக்கள் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முற்றாக சேதமடைந்து காணப்பட்ட அனர்த்த எச்சரிக்கை கோபுரம் புனரமைக்கப்பட்டு  மக்கள் பாவனைக்கு இன்று சனிக்கிழமை விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்தார்.

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முற்றாக சேதமடைந்து காணப்பட்ட இவ் அனர்த்த எச்சரிக்கை கோபுரம் 62 இலட்சம் ரூபா செலவில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் புனரமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

யாழ். மாவட்டத்தில்  8 அனர்த்த எச்சரிக்கை கோபுரங்கள்  உள்ளன. மணற்காடு, நெடுந்தீவு, வல்வெட்டித்துறை, சுப்பர்மடம், உடுத்துறை ஆகிய பகுதிகளிலுள்ள   5 எச்சரிக்கை கோபுரங்கள்; சூரியகதிர் மூலமும் மருதங்ககேணி,  காரைநகர், ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளிலுள்ள 3 எச்சரிக்கை கோபுரங்கள் மின்சாரத்திலும் இயங்குவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .