2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பெண்ககள் மீது சேஷ்டை: தடுக்க முயன்ற சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (கிரிசன்)
மதுபோதையில் பெண்களுடன் மின்பஸ்ஸில் சேட்டை விட முயன்றவர்களை  தடுக்க முற்பட்ட நடத்துனரும் சாரதியும் தாக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
        
சுன்னாகம் மசியப்பிட்டிக்கு இடையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து சுன்னாகம்  ஊடாக அளவெட்டி செல்லும் மினிபஸ்ஸொன்றில் குடிபோதையில் காணப்பட்ட  நான்குபேர் எறியுள்ளார்கள்.

இவர்கள் பஸ்ஸில் பயணித்த பெண்களுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டதை அவதானித்த பஸ் நடத்துனர்,  அதனை தடுக்க முயன்றபோது அவரை மேற்படி குழுவினர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி குழுவினரால் பஸ் நடத்துனர் தாக்கப்படுவதை அவதானித்த சாரதி அதனை தடுக்க முயன்றபோது சாரதியையும் மேற்படி குழுவினர் தாக்கவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை தொடர்ந்து சாரதியும் பஸ்நடத்துனரும் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .