2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் தீக்கிரையாக்காப்பட்டன

Super User   / 2012 நவம்பர் 29 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


 நீதிமன்றின் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டு யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவி  பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தலைமையில் தீக்கிரையாக்காப்பட்டன.

இவை, கடந்த திங்கட்கிழமை தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை கடற் படையினர் கைது செய்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி கடற்றொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது மீனவர்களுக்கு 3,000 தண்டம் விதிக்கப்பட்டதுடன் வலைகளை அழிக்குமாறு கடற்றொழில் மற்றும் நிர்pயல் வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில், இன்று 75,000 ரூபா பெறுமதியான வலைகளை கடற்றொழில் நீரியல் வளத்துறையில் அழிக்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .