2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நாய்க்கு நஞ்சூட்டி நகைகள் கொள்ளை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ரூபன், கிரிசன்)

நாய்க்கு நஞ்சூட்டி கொன்று விட்டு வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து சுமார் 10 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியிலேயே இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதிகாலை வேளையில் குறித்த வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த நகைகள், மற்றும் கையடக்கத் தொலைபேசிகள், சிறுதொகைப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டுக்கு திருடச்சென்ற திருடர்கள் வீட்டிலிருந்த நாய்க்கு கருவாட்டில் நஞ்சு கலந்து கொடுத்துள்ளனர். அந்த நாய் இறந்ததையடுத்து வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்துள்ளனர். அவர்களும் மயக்கமடைந்ததை அடுத்தே வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்து அதிகாலை 4 மணியளவிலேயே எழுந்தபோதே வீட்டிலிருந்த பொருட்கள் திருட்டுபோயுள்ளதை வீட்டின் உரிமையாளர் அறிந்துள்ளார். இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .