2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை மாணவி சடலமாக மீட்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
யாழ்.சுன்னாகம் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவி ஒருவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியாலையில்; ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மேற்கு ஐயன்னா வீதியைச் சேர்ந்த செல்வி நடராசா சியாணி (வயது 21) என்பவரின் சடலமே நேற்று மாலை 6.30 மணியளவில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர், யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் உறவினரை குறித்த மாணவியின் பெற்றோர் நேற்று பிற்பகல் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய வேளையில் தனது மகள் மேசையில் தலை சாய்ந்து கிடந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அவரை எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை. இதணையடுத்தே அவர் மரணமடைந்துள்ளதை தெரிந்துகொண்டதாக தெரிவித்த பெற்றோர் அவரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .