2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை, கடலுணவு பதனிடும் நிறுவனம் யாழில் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி,எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணத்தில் தனியார் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் கடலுணவு பதனிடும் நிறுவனம் ஆகியன இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே இவற்றை திறந்துவைத்துள்ளனர்.

கடலுணவு பதனிடும் நிறுவனம் யாழ். பாஷையூர் பகுதியிலும் ஜஸ் உற்பத்தி தொழிற்சாலை யாழ். குருநகர் பகுதியிலும் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

குருநகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜஸ் நிறுவனம் 35 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி மற்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க தலைவர்கள் உட்பட உத்தியோகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .