2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கோண்டாவில் படுகொலை சந்தேக நபர்கள் இருவர் விடுதலை: எஸ்.எஸ்.பி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கோண்டாவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த பெரும்பான்மையின இளைஞனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 4 பேரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் மற்றும் தந்தை மகன் உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தந்தையும் மகனும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், கணவன் மனைவி இருவர் மீதும் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .