2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மீன்பிடித்துறையில் யாழ். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள் 25 பேருக்கு மீன்படி பரிசோதகர் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளம் கற்கை நெறியினை பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய மாணவர்களில் 25பேர் தெரிவு செய்யப்பட்டு, 2013ஆம் ஆண்டில் மீன்பிடி பரிசோதாகர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்புக்கள் வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ். குருநகர் பகுதியில் ஐஸ் உற்பத்தி நிறுவனத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .