2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'ஒப்பந்த முகாமைத்துவம்' பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

உலக வங்கியின் நிதியுதவியுடன் புறநெகும 'நெல்சிப்திட்ட'  ஒப்பந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான விளக்க பயிற்சிப்பட்டறை யாழ். உள்ளூராட்சி திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

உதவி உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழியங்குகின்ற ஒவ்வொரு பிரதேசசபை சார்ந்த உதவித்திட்ட முகாமையாளர்களுக்கும் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் பொறியியலாளர்களுக்கும் 'ஒப்பந்த முகாமைத்துவம்' என்னும் தொனிப்பொருளில் இப்பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து  50இற்கும்  மேற்பட்டவர்கள் இப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .