2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஒருவருட பூர்த்தி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


தற்போதைய யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா யாழ். மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி ஏற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இன்று காலை 6.30 மணியளவில் யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். தலைமை நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா பிரதிப் பொலிஸ்மா அதிபரை வரவேற்று சிறப்புரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .