2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞன் பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி)

யாழ்ப்பாணம், அரியாலை, தபால்பெட்டிச் சந்தி பகுதியில் சற்று நேரத்துக்கு முன் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விபத்தில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்க்த திவாகரன் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியினூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி இளைஞன் மீது, டிரக்டர் ரக வாகனம் ஒன்று மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், யாழ். மாநகரசபை ஊழியரொருவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அரியாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .