2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். வைத்தியசாலையில் மருத்துவ தொழில் வல்லுநர்கள் சுகவீன போராட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ தொழில் வல்லுநர்கள் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் சுகவீன போராட்டத்தினை  முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக நேரக் கொடுப்பனவை அதிகரித்தல், விஷேட தரத்திலான நியமனங்களை வழங்குதல், நிறைவுகாண் தொழில் வல்லுநர்களின் நியமனம், தீர்வையற்ற வாகன இறக்குமதி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இன்று இந்த சுகவீன பேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் உள்ள மருத்துவவியல் தொழில்நுட்ப வல்லநர்களும் இச்சுகவீன விடுப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தலைவர் நா.ஜெயபாஸ்கரன் கூறினார்.

மருத்துவவியல் தொழில் வல்லநர்களின் சுகவீன விடுப்பு போராட்டத்தில் வெளிநோயாளர் பிரிவு நோயாளிகள் தாம் பெரும் அவதிக்குள்ளாவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .