2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். வைத்தியருக்கு வாள் வெட்டு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கந்தர்மடம் சந்தியில் இன்று வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட இந்த தாக்குதலில் காது,மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறனே கடும் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

அவரது கையிலேயே வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிபுணர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .