2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மறைந்த நம் உறவுகளுக்கு அஞச்லி செலுத்துவது தவறில்லை: கே.விந்தன்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ரூபன்)

மறைந்த நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறேதும் இல்லை என யாழ். மாநாகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கே.விந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியது அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுபியான் மேற்படி கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்கருத்தினை மறுத்த யாழ். மாநாகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கே.விந்தன், 'தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மும்மொழியினரும் எமது உறவுகளே அவ்வாறான நம் உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவது தவறில்லை.

இவை பல்கலைக்கழகத்தில் மட்டும் அல்ல நிறுவனங்கள், திணைக்களங்கள் என அனைத்து இடங்களிலும் இடம்பெற வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .