2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழின் சில பகுதிகளில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 17 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதாலும் 24 மெகாவோட்ஸ் புதிய மின்திட்டத்தை மின்வலையமைப்புடன் இணைக்க வேண்டியுள்ளதாலும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

17.01.2013 வியாழக்கிழமை,  19.01.2013 சனிக்கிழமை மற்றும் 21.01.2013 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் காலை 08.30 மணியிலிருந்து மாலை 06 மணிவரை கரணவாய் அண்ணாசிலையடிப் பிரதேசத்திலும் 18.01.2013 வெள்ளிக்கிழமை, 22.01.2013 செவ்வாய்க்கிழமை மற்றும் 24.01.2013 வியாழக்கிழமை ஆகிய தினங்களில் காலை 08.30 மணியிலிருந்து மாலை 06 மணிவரை குஞ்சர்கடையின் ஒருபகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி ஆகிய இடங்களிலும் மின்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
18.01.2013 வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 06 மணிவரை நெல்லண்டை, கற்கோவளம், புனிதநகர், சிவன்கோவில் முதல் சிவப்பிரகாச வித்தியாசாலை வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும் 19.01.2013 சனிக்கிழமை, 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 08.30 மணியிலிருந்து மாலை 06 மணிவரை ஸ்ரான்லி வீதி, யாழ். மாநகரசபை பிரதேசம், பாஷையூர், யாழ் மாநகரசபைப்பகுதி, உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, சுன்னாகம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பழை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான் ஆகிய இடங்களிலும் 19.01.2013 சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 06 மணிவரை புன்னாலைக்கட்டுவன், அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர், நிலாவரை, வல்லை முதல் மந்திகை வரையான வடமராட்சிப் பிரதேசத்திலும் நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 02 மணிவரை யாழ். குடாநாடு முழுவதும் மற்றும் பளைப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்தடை மேற்கொள்ளப்படும்.
 
20.01.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரை சிவன்கோவில் முதல் சிவப்பிரகாச வித்தியாசாலை வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும் 21.01.2013 திங்கட்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரை மருதங்கேணி முதல் குடத்தனை வரையான பிரதேசம், வாதரவத்தை, வீரவாணி, புத்தூர், ஆவரங்கால், நிலாவரை ஆகிய இடங்களிலும், 22.01.2013 செவ்வாய்க்கிழமை மற்றும் 24.01.2013 வியாழக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 06 மணிவரை மருதங்கேணி உரும்பிராய், ஊரெழுப் பிரதேசத்தின் ஒருபகுதி ஆகிய இடங்களிலும் மின்தடை மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சாரசபையின் மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .