2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மக்களுக்கு தேவையாக சேவையை கூட்டுறவுத்துறையினர் ஆற்றிவருகின்றனர்

Kanagaraj   / 2013 ஜனவரி 20 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யுத்தகாலத்திலும் அதற்கு பின்னர் மீள் குடியேறிய காலத்திலும் மக்களுக்கு தேவையாக மகத்தான சேவையை கூட்டுறவுத்துறையினர்  ஆற்றிவருகின்றனர் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலக கட்டடத் திறப்புவிழாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஏனைய துறைகளோடு ஒப்பிடுகையில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றுகின்றவர்களுக்கு மிக குறைந்தளவான வேதனங்களுடன் மிக அதிகளவான சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்

மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவு உலருணவுப் பொருட்களை வழங்கி நெருக்கடியான நேரத்தில் பொருத்தமான பணியினையும் மேற்கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இதன்போது கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறையில்  மிகச்சிறப்பாக சேவையாற்றிய பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இன்றைய இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்,மாவட்டச் செயலக உதவிதிட்டப்பணிப்பாளர் கேதீஸ்வரன்,கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்  தவராஜா, சங்கத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .