2025 ஜூன் 19, வியாழக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன் கருதி அலுவலக காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்டடோரின் நலன் கருதி சமூக நலன் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான காரியாலம் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலக காணிப்பதிவாளர் அலுவலக கட்டிடத்தில் இக்காரியாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் ஏற்பாட்டில், பொருளாதார சமூக நலன்புரி வேலைத்திட்ட யாழ்.மாவட்ட இணைப்பாளர் ஜகத்குமார தலைமையில் நடைபெற்ற இவ் அலுவலக ஆரம்பிப்பு நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டனர்.

இதன்போது  உரையாற்றி அவர்,

"யாழ். மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட 3000 முன்னாள் போராளிகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடனும், சமூக, பொருளாதார நலன்புரி விடயங்களில் அதிக அக்கறை செலுத்தும் நோக்கத்துடன் இக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் 4 வீத வட்டி அடிப்படையில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் கிராம மட்ட மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு ஊடகங்கள்; ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இச்செயற்திட்டமானது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களுக்கு அவர்களது தேவைகளை நிறைவேற்றிகொள்ள உதவும்' என தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .