2025 ஜூன் 19, வியாழக்கிழமை

'வலைப்பாட்டு பிரதேசத்தின் மேம்பாட்டில் விசேட கவனம் செலுத்தப்படும்'

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மிகவும் பின்தங்கிய பிரதேசம் என்ற வகையில் வலைப்பாடு கிராமத்தின் மேம்பாட்டில் நாம் அதிக அக்கறை காட்டிவருகின்றோம். தொடர்ந்தும் இப்பகுதியின் அபிவிருத்தியில் விசேட கவனமெடுத்து செயற்பட நாம் தயாராக உள்ளோம்'  என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் தெரிவித்துள்ளார்.

பூநகரி வலைப்பாடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்  விளையாட்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பூநகரி வலைப்பாட்டு பிரதேச மக்களின் மேம்பாடு தொடர்பான விடயங்களில் நாம் தொடர்ச்சியாக மிகுந்த கரிசனையுடன் உழைத்து வருகின்றோம். இப்பகுதியில் மக்கள் மீள்குடியேறிய காலம் முதல் பல்வேறுகையான உதவித்திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் வழங்கிவருகின்றனர்.

இப்பகுதியில், விளையாட்டு துறையினை ஊக்குவித்தல், தொழில்சார் மேம்பாட்டை ஏற்படுத்தல், கல்வித்துறையினை மேம்படுத்தல் போன்ற விடயங்களுடன் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத்தேவைகளை நிவர்த்திசெய்தல் போன்ற விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக கடந்த கால செயற்பாடுகள் அமைந்திருந்தன.

இனிவரும் காலங்களிலும் அச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் மக்களின் மேம்பாடு தொடர்பான ஏனைய விடயங்களையும் கவனத்தில் கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் மிகுந்த பின்தங்கிய பிரதேசம் என்ற வகையில் வலைப்பாடு பிரதேசம் நாடாளுமன்ற உறுப்பினரால் நினைவில்கொள்ளப்படும் பகுதியாக உள்ளது.

பாடசாலைகள் எதிர்கொள்ளும் ஆசிரியர் வளப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்செய்யும் விடயத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களுடனும் பேசிவருகின்றார்.

அதில் இவ்வாறான பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர் வளத்தினை வழங்குவது தொடர்பில் சீரான பொறிமுறை கையாளப்பட வேண்டும் எனவும் அவர் கல்வி சார் உயர் மட்டங்களுக்கு அளுத்தம் கொடுத்து வருகின்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .