2025 ஜூன் 18, புதன்கிழமை

சிறை தண்டனை அனுபவித்து வெளியேறுவோரை கண்காணிக்க பொலிஸ் குழு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 25 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வெளிவருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை கண்காணிப்பதற்கு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அண்மைக்காலங்களில் யாழ். மாவட்டத்தில் கொலை மற்றும் கொல்லைச் சம்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதனைத்தடுப்பதற்கு விண்ஷட நடவடிக்கைகள் எடுக்ககப்பட்டு வருகின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சமீக காலங்களில் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்று வெளியேறுபவர்கள் சிலர் ஊர்காவற்துறை மற்றும் யாழின் சில பகுதிகளில் முகமுடி அணிந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் சிலரைக் கைதுசெய்த வேளையில் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறிய கைதிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இதனால் இவ்வாறு சிறையில் இருந்து வெளியேறியவர்களை கண்காணிப்பதற்கு விண்ஷட குழு நியமிக்கப்பட்டு, பகல் மற்றும் இரணு வேளைகளில் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .