2025 ஜூன் 18, புதன்கிழமை

வன்னிமுழுமையிலும் அடுத்த மாதம் முதல் சமுர்த்திதிட்டம்: அமைச்சர் டக்ளஸ்

Kanagaraj   / 2013 ஜனவரி 26 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


வன்னிமுழுமையிலும் அடுத்த மாதம் முதல் சமுர்த்திதிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

யாழ்.பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வைபவத்தி;ல் பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க அபிவிருத்திமன்றின் மூலம் வசதி குறைந்த சிறுவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடமாகாணத்திற்கு சமுர்த்தி திட்டமானது எமது அரசியல் அழுத்தம் காரணமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் தற்போது வன்னியில் இத்திட்டம் இல்லாத நிலையிலும் அடுத்த மாதம் முதல் சமுர்த்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

மக்களின் சேவையைக் கருத்திற் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலுமே நாம் அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் ஏனைய சக தமிழ்க்கட்சிகள் தமது சுயநலத்திற்காகவே அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. இன்றுள்ள சூழலில் இருப்பதை பாதுகாத்துக் கொண்டு எமது மக்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுக்கொள்வதும் அதிலிருந்து முன்னேறுவதுமே முக்கியமானதாகும்.

அந்தவகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையும் பாராட்டப்பட வேண்டும் என்பதுடன், இவ்வாறான மக்கள் பணிகளுக்கு எமது ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெற்றோரை இழந்த 167 மாணவர்களுக்கும், பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுமாக மொத்தம் 238 மாணவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் இவ் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இதற்காக யாழ்.பிரதேச செயலகம் வருடாந்தம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விசேட நிதிசேகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு 21 இலட்சம் ரூபா நிதியினை சேகரித்ததன் பிரகாரம் மாணவர்களுக்கு இந்நிதியை வழங்கும் அதேவேளை, குறித்த பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இனங்காணப்பட்ட வறிய மாணவர்களுக்கு சப்பாத்துக்கள், பாடசாலை சீரூடைகள் என்பனவற்றையும் வழங்கவுள்ளது.

பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம


நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊக்கத்திற்கு அமைவாகவும், வழிநடத்தலுக்கு அமைவாகவும் மேற்படி செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இத்திட்டம் எதிர்காலங்களில் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), சமுர்த்தி உதவி ஆணையாளர் மகேஸ்வரன் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

இதன்போது சமுர்த்தி திட்ட மாவட்ட இணைப்பாளர் ரகுநாதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் சண்முககுமார் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .