2025 ஜூன் 18, புதன்கிழமை

எரியுண்ட மாணவி உயிரிழப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 27 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழ். புகையிரத வீதியில் எரியுண்ட நிலையில் காணப்பட்ட மேற்படி மாணவி, பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு யாழ். போதானா வைத்திசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டடிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று காலை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Irshathmnm Sunday, 27 January 2013 09:13 AM

    தமிழர்கள் எடுத்ததுக்கெல்லாம் தற்கொலை செய்கின்றனர். போரால் அவர்கள் செத்தது காணாதா? அல்லது சைக்கோ பிரச்சினையா? முதலில் அதற்கொரு ஆணைக்குழுவைப் போடுங்கோ?...

    Reply : 0       0

    aj Sunday, 27 January 2013 12:44 PM

    :(((
    இது தற்கொலை என்று எப்படி ஐயா சொல்லுரிங்க? எரிகாயத்துடன் காணப்படுகிறார், இது ஒரு கொலையாக கூட இருக்கலாம். எதுமே தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்று பேசுவது அசிங்கம். இப்படி தான் கொலையை தற்கொலையாக மாத்துராங்க போல இருக்கு

    Reply : 0       0

    manithan Sunday, 27 January 2013 02:09 PM

    இது தற்கொலை என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா சகோதரரே?

    Reply : 0       0

    karan sri Sunday, 27 January 2013 07:30 PM

    சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு தானே தீமூட்டியது தான். செய்தியை உறுதிசெய்ய பொய்பேசவேண்டாம். ஏன் எனில் மக்களுக்காக தான் ஊடகமே தவிர ஊடகத்திற்காக மக்களில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .