2025 ஜூன் 18, புதன்கிழமை

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பாடசாலைக் காவலாளி கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 31 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,-கிரிசன்,-சுமித்தி தங்கராசா

பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலைக் காவலாளியொருவரை இன்று வியாழக்கிழமை காலை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் காவலாளியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.   இவர் இம்மாணவியை நேற்று புதன்கிழமை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இம்மாணவி பெற்றோருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், யாழ். பொலிஸ் நிலையத்திலும் இன்று வியாழக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .