2025 ஜூன் 18, புதன்கிழமை

ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 01 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு சிலிண்டர் மற்றும் வெள்ளிரும்பு ஒட்டும் இயந்திரம் மோடிவேசன் நிறுவனத்தினால் இன்று கையளிக்கப்பட்டது.

யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தில் இன்று மதியம் 3.00 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், மோடிவேசன் நிறுவனத்தின் முகாமையாளர் எல்.எல்.துஷ;யந்தன் சுமார் 1 இலட்சம் பெறுமதியான சிலிண்டர் மற்றும் வெள்ளிரும்பு ஒட்டும் இயந்திரத்தினை யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவி வைத்தியர் எஸ்.கணேச மூர்த்தியிடம் கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில், இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதி நிதி பிலிக்ஸ் மற்றும் யாழ். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் தெய்வேந்திரம் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், திட்ட இணைப்பாளர், வலுவிழந்தோர் நடமாடும் உபகரணங்கள் தொழில்நுட்ப வியலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .