2025 ஜூன் 18, புதன்கிழமை

கொல்லங்கலட்டிக்கு மின் விநியோக திட்டம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 02 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொல்லங்கலட்டி பிரதேசத்திற்கான மின் விநியோகத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பபழை பிரதேச செயலர் சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகிழவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்; ஆகியோர் கலந்துகொண்டு மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தனர்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபா செலவில் இந்த விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பிரதம மின் பொறியியலாளர் ஞானகணேசன், வடக்கின் வடசந்தம் மின் விநியோகத் திட்டப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .