2025 ஜூன் 18, புதன்கிழமை

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி தற்காலிக பணி நீக்கம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

டிரக்டர் வண்டி சாரதியொருவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாவினை இலஞ்சமாகக் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார். 

கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற குறித்த டிரக்டர் வண்டியின் வாகன சாரதியிடம் வாகனத்தின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி கேட்டுள்ளார்.

அதற்கிணங்க, ஆவணங்களை குறித்த வாகன சாரதி சமர்ப்பித்துள்ளார். அத்துடன், அவரிடம் 5 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸ் பொறுப்பதிகாரி கோரியதை அடுத்து அவரும் அப்பணத்தைக் கொடுத்துள்ளார்.

பின்பு பணத்தினை வழங்கிய சாரதி, இது தொடர்பில் யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி விசாரணைக்குட்படுத்ததப்பட்ட வேளை, தான் இலஞ்சம் பெற்றுக் கொள்ளவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பான முறைப்பாடொன்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேராவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா ஊடாக குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி விசாரணைக்குட்படுத்தப்பட்டு விசாரணையின் பின்னர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மேலும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .