2025 ஜூன் 18, புதன்கிழமை

அதிபர் நியமனம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பதாக உறுதி: த.கனகராஜ்

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின்  அதிபர் நியமனத்தில் பாராபட்சம் காட்டப்பட்டதென சென்.ஜேம்ஸ் மகளீர்; கல்லூரி அதிபரின் முறைபாட்டிற்கு நியாயமான பதில் கூறுவதாக மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் ப.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் நேற்று தெரிவித்தார்.

கனகரத்தினம் மகா வித்தியாலயத்திற்கான அதிபர் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்றது. சென்.ஜேம்ஸ் மகளீர் கல்லூரி அதிபருக்க கிடைக்க வேண்டிய அதிபர் நியமனம், பெரியபுலம் மகாவித்தியாலய அதிபருக்கு வழங்கப்பட்டது.
இவ் அதிபர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக சென். ஜேம்ஸ் மகளீர் கல்லூரி அதிபர் சுட்டிக் காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற விசாரணையில், மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ப. விக்னேஸ்வரன் உட்பட நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் உதவிக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சென். ஜேம்ஸ் மகளீர் கல்லூரி அதிபருக்கு கிடைக்க வேண்டிய அதிபர் நியமனத்திற்கான முறைகேட்டின் நியாயப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எடுத்துரைக்கப்பட்ட பின்னர், எதிர்வரும் 10 நாட்களில் அதிபர் நியமனம் வழங்கப்படாமைக்கான விசாரணையின் தீர்மானத்தினை  எழுத்து மூலம் சமர்ப்பிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் உறுதியளித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் மேலும் கூறினார்.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .