2025 ஜூன் 18, புதன்கிழமை

இந்திய துணை தூதுவரின் செயலர் வீட்டில் திருட்டு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 09 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய துணை தூதுவரின் செயலாளர் வீட்டில் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். பிறவுண் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று  உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பொருட்களில் சுமார் 22 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய தூதுவரின் செயலாளர் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்திய தூதரகத்திற்கு வேலைக்கு சென்று இரவு 8 மணியளவில்  வீட்டுக்கு  திரும்பியுள்ளார். அதன் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பில் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் நேற்று இரவே முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .