2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ்.நகரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஐவர் கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

யாழ். குருநகர் மற்றும் நாவாந்துறை ஜந்து சந்தி பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 16 முதல் 21 வயதுக்குட்பபட்டவர்கள் என்றும் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியின் பின்னர் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் சில இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசி திருட்டு மற்றும் வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக  யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .