2025 ஜூன் 18, புதன்கிழமை

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 17 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் குளத்து நீரிழ் முழ்கி உயிரிழந்துள்ளார். வேலணை 8ஆம் வட்டாரத்தில் சேர்ந்த பாலசுப்பிரமணியம் நிரோஜன் (வயது 18) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். அதே இடத்தில் உள்ள வேணா குளத்தில் இன்று காலை 11.30 மணியளவில் மைத்துனருடன் குளிக்கச் சென்றுள்ளார்.

தன்னுடன் வந்த மைத்துனரை காணவில்லை என வீட்டில் தெரிவித்த போது 12.00 மணியளவில் உறவினர்களினால் இளைஞனின் சடலம் குளத்தில் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .