2025 ஜூன் 18, புதன்கிழமை

அரசியலின் வீழ்ச்சியே ரணிலுக்கான அழைப்பு: எஸ்மோகன்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 17 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'வலிமேற்கு மக்களின் நில அபகரிப்பு உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதற்காக  எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை  யாழ்ப்பாணத்திற்கு அழைத்தது அரசியல் வீழ்ச்சி' என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.மோகன் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.மோகன் யாழ்.லக்ஸ்சோர்ஸ் விருந்தினர் விடுதியில் இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.
அங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிதான் பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்கியது மட்டுமன்றி தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கள், அரச காணி சுவிகரிப்புக்கள் என பல்வேறு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வந்தது.

அதேவேளை, யாழ். பொதுநூலகம் 80 ஆயிரம் நூல்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியினரால் எரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் போக்கினையே இனி வரும் அரசியல்வாதிகள் நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள்.
அதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் தீர்வு, சமவுரிமை என்பன வேண்டும். தமிழர்களுக்கு சுயநிர்ணய அங்கீகாரத்தினை பெற்றுகொடுக்க வேண்டும். அவ்வாறு பெற்றுகொடுப்பதற்கு அதிகார பகிர்வு அவசியமென்றும் அவர் கூறினார்.

அதிகார பகிர்வினை நடைமுறைப்படுத்த 13ஆவது திருத்த சட்டத்தினை கூட்ட வேண்டுமே தவிர குறைக்கக் கூடாது. திருத்த சட்டத்தினை வலுப்படுத்த வேண்டும். வலுப்படுத்துவதற்கு சிங்கள மக்களிடையே மனமாற்றம் ஏற்பட வேண்டும். சிங்கள மக்களிடையே மனமாற்றம் ஏற்படாவிட்டால், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலுக்க அப்பால் இன்னொரு சக்தி இருக்கின்றது. அந்த சக்தி பலம் வாய்ந்த சக்தியாக இருக்கின்றது. அந்த அரசியல் தீர்வில் வென்றால் அது வெற்றி. அந்த வெற்றியைப் பெறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்த வேண்டும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது அரசுடன் இருப்பவர்களுக்கு பலத்தினை குறைக்கும். அந்த பலத்தின் மூலம் அரசியல் தீர்வில் வெற்றிகொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .