2025 ஜூன் 18, புதன்கிழமை

குறைபாடுகளினால் ஏ தர உணவகங்களை மூடும் நிலை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் ஏ தரத்தில் காணப்படும் உணவகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளினால் அந்த உணவகங்களை மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபையின் பிரதம பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவநாதன் நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். நகர், நல்லூர், வண்ணார்பண்ணை, நாவாந்துறை கொழும்புத்துறை, குருநகர் போன்ற இடங்களில் காணப்படும் 5 உணவகங்கள் மீது  சிறிய குறைபாடுகள் காரணமாக பொதுசுகாதார பரிசோதகர்களினால் யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் குருநகர் பொதுசுகாதார பிரிவு 2இல் உள்ள ஏ தரத்திலான உணவகம் மூடப்பட்டுள்ளது. ஏனைய 4 பி மற்றும் சி தரங்களையுடைய உணவகங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்; அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க,  அச்சிட்ட தாள்களில் உணவு பொதியிடல் முற்றுமுழுதாக குறைவடைந்துள்ளதாக யாழ். மாநகரசபையின் பிரதம பொதுச்சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .