2025 ஜூன் 18, புதன்கிழமை

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் உணவகங்களை மூட நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

சுகாதார சீர் கேடான முறையில் இயங்கும் உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாநகர சபையின் சுகாதாரக் குழுத் தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தரம் குறைந்த சுகாதாரமற்ற பல உணவகங்கள் இனங்காணப்பட்டுள்ளன. குறித்த உணவங்களுக்கு சகாதாரத்தைப் பேணி உணவகங்களை தரமுயர்த்துமாறு ஆலோசனைகள் வழங்ப்பட்டு வருகின்றன.

அவ்வாறு சீர் செய்யப்படாத உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாநகர சபையின் அகற்றப்படும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படும் கல்லுண்டாய் வெளியில் கழிவுப்பொருட்களை உரிய முறையில் பேணி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அக்கழிவுக் பொருட்களை தொட்டி அமைத்து போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .