2025 ஜூன் 18, புதன்கிழமை

நாச்சிக்குடாவில் கடல் உணவின் விலைகள் குறைவு

Kogilavani   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் கடல் உணவுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாகவும், கடல் உணவுகளை பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கின்றதாகவும் நாச்சிக்குடா மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்திய ரோலர் படகுகளின் வருகையின்மையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இந்திய ரோலர் படகுகள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடல் உணவுகளை பிடிக்கும் போது,  மீனவர்களாகிய தாம் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியதாகவும் தற்போது எந்த சிரமமுமின்றி கடல் உணவுகளை பிடிப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போது ஒரு கிலோ மீன், இறால், கணவாய், நண்டு போன்ற கடல் உணவுகள் 300 முதல் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றதாகவும், கொள்வனவு அதிகமாகவும் காணப்படுகின்றதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலமை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்குமாயிருந்தால், தாம் யுத்தத்தினால் இழந்தவற்றினை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமென்றும், அதேவேளை, தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியுமென்றும் அவர்கள்  மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .