2025 ஜூன் 18, புதன்கிழமை

'வடமாகாண விவசாய அமைச்சின் தலைமையகம் கிளிநொச்யிலேயே இயங்கவேண்டும்'

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
, சிவகருணாகரன்

'வடமாகாண விவசாய அமைச்சின் தலைமையகம் கிளிநொச்சியிலேயே இயங்கவேண்டும். கிளிநொச்சி மாவட்டம் விவசாயிகளுக்கான செயற்பாடுகளை மையப்படுத்திய ஒரு மாவட்டம். எனவே இங்கு தேவை அதிகமாக இருக்கிறது' என்று நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாய அமைச்சும் விவசாயத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட நவீன பயிர்ச்செயகை முறைகளை அறிமுகப்படுத்தம் வயல்விழா நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி விவசாய பயிற்சிப் பண்ணையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் இதனை தெரிவித்தார்.

'கிளிநொச்சி மாவட்டம் ஒரு விவசாய மாவட்டம். இங்கு வாழ்கின்ற மக்களில் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்தை மட்டுமே ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள் எனவே விவசாயத்தை மூலதனமாகக் கொண்டு இயங்கும் இம்மாவட்டத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தி அதனூடாக விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

அதன் ஆரம்பகட்டமாக இவ் வயல்விழா அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதேவேளை இவ்வருட இறுதிக்குள் மாபெரும் விவசாயக் கண்காட்சி ஒன்றினை நடாத்துவதற்கும் வடமாகாண சபை ஏற்பாடு செய்துள்ளது' என்றார்.

இந் நிகழ்வில் கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண பிரதமசெயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், விவசாய கால்நடை மீன்பிடி நீர்ப்பாசன மற்றும் காணி அமைச்சின் வடமாகாண செயலாளர் கால்டின், வடமாகாண கால்நடை உற்பத்திப் பணிப்பாளர் வைத்தியர் வசீகரன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .