2025 ஜூன் 18, புதன்கிழமை

சுகாதார பிரச்சினையால் காரைநகர் பிரதேச சபையில் சலசலப்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டத்தில் சுகாதார பிரச்சினைகள் தொடர்பான விவாதம் நடைபெற்ற கொண்டிருந்த போது சற்று சலசலப்பு ஏற்பட்டது.

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. விவாதத்தின் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் வீரமுத்து கண்ணன் சபைக்கு ஒவ்வாத வார்த்தைப் பிரயோகம் செய்து கடுந்தொனியில் எச்சரித்தமையினால் இந்த சலசலப்பு ஏற்பட்டது.

சுகாதார பிரச்சினைகள் தொடர்பான விவாதம் நடைபெற்ற போது, உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால், வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்று என்றும் அவர் கோஷம் எழுப்பினார்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பது சாத்தியப்படாத விடயமாகும் என்பதனால் உணவு நிலையங்களுக்கு சிறிதுகால அவகாசம் கொடுத்து, சுகாதாரமான முறையில் உணவு நிலையங்களை நடத்துவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர், சட்டநடவடிக்கை எடுக்கலாம் என தவிசாளர் ஆணைமுகன் பதிலளித்தார்.

அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த உறுப்பினர் வீரமுத்து கண்ணன் எனது யோசனையை உடனயாக அமுல்படுத்தவேண்டும் என்றும் கோ'மிட்டதுடன் சுகாதாரமற்ற உணவு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் பொதுசுகாதார பரிசோதகரை நேரடியாக அழைத்து வேலையிலிருந்து நீக்குவதற்கும் தன்னால் முடியும் என்றும் கூறினார்.

இதனால் அவையில் சற்று பதற்றம் நிலவியதுடன் சில நிமிடங்களுக்கு பின்னர் அவைநடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .