2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில். வாள்வெட்டு: நால்வர் படுகாயம்

Kanagaraj   / 2013 மே 02 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கொடுத்த பணத்தினை கேட்டு சென்ற இருவர்; மீது 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில்  நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்புத்துறை துண்டி சந்தியில் இந்த சம்பவம் இன்று மதியம் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரம் பிரேமம்காந் (வயது 26) சதர்சன் நிரூபன் (வயது 27) குணசேகரம் பிரசாத்  (வயது 24) வட்டுக்கோட்டைப் பகுதியசை; சேர்ந்த காந்தன் ஆகியோருமே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குணசேகரம் பிரேம் காந் என்பவருக்கு கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம்  கொடுக்க வேண்டியிருந்துள்ளது.அந்த  பணம் தருமாறு கேட்டு அவரும் அவருடைய  சகோதரனும் சென்ற வேளையிலேயே, பணத்தை கொடுக்கவேண்டியவர்;; 8 பேர் கொண்ட குழுவுடன் வாகனத்தில் வந்து வாளால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து இருத்தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன்போதே நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய நால்வரில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மூவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .