2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி

A.P.Mathan   / 2013 மே 03 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சர்வதேச ஊடக தினமான இன்று உயிர் நீத்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ரி. வினோஜித் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் நிறைவேற்று அதிகாரி வில்லியம் சுகுமார் றெக்வுட் மற்றும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரி அமீன் ஹுசைன் ஆகியோர் உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

அதன்போது, யாழ். ஊடகவியலாளர்களும் அஞ்சலி செலுத்தியதுடன், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் நிறைவேற்று அதிகாரிகள் பத்திரிகையாளருடன் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து, பத்திரிகை ஆணைக்குழுவிற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .