2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு காரியாலயம்

A.P.Mathan   / 2013 மே 03 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் புதிய காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்லியம் சுகுமார் றெக்வுட் தலைமையில் யாழ். புகையிரத வீதியில் அமைந்துள்ள வீரசேகரி பத்திரிகை காரியாலயத்திலேயே இன்று 2.30 மணியளவில் தினக்குரல் பத்திரிகை நிறுவுநரும் பிரபல தொழிலதிபருமாகிய எஸ்.பி.சாமி அவர்கள் சம்பிரதாய பூர்வமாக பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்ததுடன், நாடாவெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி, யாழ். மாவட்ட பாதுகாப்பு படை தலைமையகத்தின் மேஜர் மல்லவராட்சி, லெப். கேணல் லால் நாணயக்கார மற்று இராணுவ அதிகாரிகள் உட்பட கடற்படை அதிகாரிகள், வீரகேசரி முன்னாள் பிராந்திய முகாமையாளர் கந்தசாமி, மீடியா சௌந்தரம் இணைப்பாளர் ரூபன் மரியாம்பிள்ளை மற்றும் பத்திரிகை நிறுவன பிரதம ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .