2025 ஜூன் 18, புதன்கிழமை

தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் 'கப்புறுக்க புறவர திட்டம்' யாழில் ஆரம்பம்

A.P.Mathan   / 2013 மே 04 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சினால் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கப்புறுக்க புறவர திட்டம்' இன்று சனிக்கிழமை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சாவகச்சேரி பிரதேச பிரிவில் உள்ள வரணிப்பகுதியில் இந்த திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவில் முதற்கட்டமான இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி ஜெகத் புஸ்பகுமார, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அகியோர் கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து தென்னை பயிர்ச் செய்கை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கண்சாட்சியினையும் அமைச்சர் பார்வையிட்டதுடன் அப்பகுதியில் இன்றைய நிகழ்வை நினைவு கூரும் வகையில் மரநடுகையினையும் மேற்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட பிரதேச செயலர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்டுள்ள கப்புறுக்க புறவர சங்கங்களிற்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன்  மாணவர்களுக்காக தென்னம் கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிழ்வில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி ஜெகத் புஸ்பகுமார, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சின் செயலாளர் டியால் சோமவீர, யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .