2025 ஜூன் 18, புதன்கிழமை

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 மே 07 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா,நா.நவரத்தினராசா

மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் கொடிகாமம் கச்சாய் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா செந்தூரன் (வயது 19) என்ற இளைஞரே இலக்காகியுள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் குத்தகைக்கு மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இவர் இன்று மதியம் கோப்பாய் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த வேளையிலேயே மின்சாரம் தாக்கியுள்ளது.

அதன்போது, அவர் தலை கீழாக மரத்தில் இருந்து நிலத்தில் விழுந்ததால்,  தலையின் பின்புறத்தில் பாரிய அடிகாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக இவர் இத்தொழில் புரிந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .