2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தாமரைப்பூ பறிக்கச்சென்ற வயோதிபர் பலி

Kanagaraj   / 2013 மே 11 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தாமரைப்பூ பறிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் தாமரைக் கொடி சுற்றிப் பலியாகியுள்ளார். இருபாலை கிழக்கு பகுதியில் இன்று  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த வீரகத்திபிள்ளை சோதிவர்மன் (வயது 57) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

இவர் கோவில்களுக்கு தாமரைப்பூ பறித்து கொடுப்பவர் என்றும், தாமரைப்பூ பறித்து கொடுப்பதற்கான ஓடர் இன்று கிடைத்தவுடன், பிற்பகல் 1.15 மணியளவில் இருபாலை கேணிக்குளத்திற்கு தாமரைப்பூ பறிக்கச் சென்றுள்ளார்.

அதன் பின்பு தாமரைப்பூ பெற்றுக்கொள்வதற்காக ஆட்கள் வந்துள்ளதாக மனைவி பெறாமகனை அழைத்து வருமாறு கூறி கேணிக்குளத்திற்கு அனுப்பியபோது, பெறாமகன் பெரிய தகப்பன் நீரில் மிதப்பதை கண்டு அயலில் இருந்தவர்களிடம் கூறிய போது, அயலவர்களினால், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணையின் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .