2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வடக்கில் இராணுவம் குறைப்பு: ஹத்துருசிங்க

Menaka Mookandi   / 2013 மே 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் படையினர் பாரியளவு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .